Friday 1 December 2017

சுங்கை சிப்புட்டில் சிவநேசன் போட்டி?

ரா.தங்கமணி
ஈப்போ-
அடுத்தாண்டு நடைபெறும் எதிர்பார்க்கப்படும் நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனைப் போட்டி நிலவலாம் என கணிக்கப்படுகிறது.

ஆளும் தேசிய முன்னனியை எதிர்த்து பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி சார்பில் ஜசெகவும் பிஎஸ்எம் கட்சியும் நேரடி களத்தில் குதிக்கலாம்  என நம்பப்படுகிறது.

தற்போது அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள டாக்டர் ஜெயகுமார் பிஎஸ்எம் கட்சியை சேர்ந்தவராக இருந்தபோதிலும் கடந்த இரு  தேர்தல்களிலும் கெ அடிலான் சின்னத்தின் கீழ் போட்டியிட்டுள்ளார்.

மும்முனைப் போட்டி நிலவினால் தேசிய முன்னணியின் சார்பில் யார் வேட்பாளராக களமிறக்கப்படுவர் என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ஜசெக சார்பில் அ.சிவநேசன் போட்டியிடலாம் என நம்பப்படுகிறது.

அ.சிவநேசன் தற்போது சுங்காய் சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிப்பதோடு கடந்த 2008ஆம் ஆண்டு பக்காத்தான் ராக்யாட் பேராக் மாநில ஆட்சியை கைப்பற்றிய வேளையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment