Saturday 2 December 2017

பேருந்தை மோதியது வாகனம்; இரு இந்தியர்கள் பலி

பாரிட்-
கட்டுப்பாட்டை இழந்த வாகனம்  எதிரே வந்த பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இந்திய இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பாரிட்டில் இருந்து வரும் வழியில் பிற்பகல் 4.30 மணியளவில் நிகழ்ந்த இந்த சாலை விபத்தில் வாகன ஓட்டுனரான துர்க்காராஜ் (வயது 29), முன் இருக்கையில் அமர்ந்திருந்த அ.ஆனந்த் ராஜ் (வயது 28) ஆகியோரே இதில் கொல்லப்பட்டவர்கள் ஆவர். துர்க்காராஜ் ஈப்போ, தாமான் கிளேபாங் ரியாவைச் சேர்ந்தவராவார். ஆனந்த்ராஜ் ஈப்போ, டேசா ரிஷா புந்தோங்கைச் சேர்ந்தவர் ஆவார்.
கட்டுப்பாட்டை இழந்ததால் எதிர்சாலையில் நுழைந்த வாகனம் பேருந்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் கடுமையான காயங்களுக்கு இலக்கான இருவரும் சம்பவ இடத்திலேயே மரணமுற்றனர்.

பேருந்து ஓட்டுனரும் இரு பயணிகளும் எவ்வித காயமுமின்றி தப்பித்தனர் என பேராக் தெங்கா மாவட்ட துணை தலைவர் டிஎஸ்பி  அஹ்மாட் ஃபவுசி தெரிவித்தார்.

No comments:

Post a Comment