Friday 29 December 2017

எதிர்க்கட்சி மீதான 'அதிருப்தி' தேமுவை வெற்றியடையச் செய்யும்- டத்தோஶ்ரீ தேவமணி


ரா.தங்கமணி
சுங்கை சிப்புட்-
சுங்கை சிப்புட் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மீது மக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர். அதனால் வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணிக்கான வெற்றி வலுவாக உள்ளது என பிரதமர் துறை துணை அமைச்சர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் ஜெயகுமார் நல்ல மனிதர். அவரை குறை சொல்வதற்கு எதுவுமில்லை. ஆனால் அவரால் மட்டுமே எதையும் மாற்றியமைத்து விட முடியாது.

எதிர்க்கட்சி உறுப்பினராக அவர் திகழ்வதால் இங்கு எவ்வித சேவையும் அவரால் மேற்கொள்ள முடியாது. மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதவராக விளங்கும் அவர் மீது மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இந்த அதிருப்தி வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் எதிரொலிக்கக்கூடும். அதனால் தேசிய முன்னணி பக்கம் மக்களின் ஆதரவு திரும்பிக் கொண்டிருக்கிறது. மக்களின் வலுவான ஆதரவு தேசிய முன்னணி ஆதரவாளரை வெற்றியடையச் செய்யக்கூடும் என இன்று எம்பிகேகே மண்டபத்தில் நடைபெற்ற பள்ளி மாணவர்களுக்கான புத்தகப்பைகள் வழங்கும் நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ தேவமணி இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment