Saturday 30 December 2017

அன்வாரின் விடுதலைக்கு முன்னதாகவே 14ஆவது பொதுத் தேர்தல்? - வலுக்கும் ஆருடம்




ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
பிகேஆர் கட்சியின் ஆலோசகரும் முன்னாள் எதிர்க்கட்சித்  தலைவருமான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹமின் விடுதலைக்கு முன்னதாகவே நாட்டின்  14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறும் என கருதப்படுகிறது.

ஓரினப் புணர்ச்சி குற்றச்சாட்டில் கைதாகி தற்போது சிறைத் தண்டனை பெற்று வரும் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அடுத்தாண்டு மே மாதம் சிறையிலிருந்து வெளியாகிறார்.

அன்வார் விடுதலையாகி பிரச்சாரத்தில் ஈடுபட்டால் அவர் மீதான விசுவாசத்தின் பேரில் வாக்காளர்களை கவர்ந்திழுக்க முடியும். இதுவே எதிர்க்கட்சி மீதான ஆதரவை பெருகச் செய்து விடும்.

அதோடு, எதிர்க்க்கட்சிக் கூட்டணியில் உள்ள கட்சிகளிடையே ஓர் இணக்கமான உறவையும் ஏற்படுத்துவதோடு தொகுதி பங்கீடு பிரச்சினைகள் தலைதூக்கா வண்ணம் சுமூகமான முறையில் அவற்றை கையாளும் தகுதி டத்தோஶ்ரீ அன்வாரிடம் உண்டு.

\இதனால் எதிர்க்கட்சி கூட்டணியான பக்காத்தான் ஹராப்பான் பலம் வாய்ந்த கூட்டணியாக உருவெடுப்பதற்கான சாத்தியத்தை மறுக்க முடியாது. டத்தோஶ்ரீ அன்வாரின் பிரச்சாரத்தால் வலுவான ஆதரவும் வெற்றி தருணமும் ஈட்ட முடியும்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் வெற்றி பெறக்கூடாது என்பதில் தீவிரம் காட்டும் தேசிய முன்னணி டத்தோஶ்ரீ அன்வாரின் விடுதலைக்கு முன்னதாகவே 14ஆவது பொதுத் தேர்தலை நடத்தி முடித்து விடும் என கருதப்படுகிறது.

அதன்படி பார்த்தால் 2018ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாட்டில் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறலாம் என்ற ஆருடம் வலுத்து வருகிறது.

No comments:

Post a Comment