Saturday 2 December 2017

4ஆவது அனைத்துலக ‘மாணவர் முழக்கம்’- மலேசியாவைப் பிரதிநிதித்து மூன்று மாணவர்கள் களமிறங்குகின்றனர்



தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கான 4வது அனைத்துலக மாணவர் முழக்கம் -2017எனும் பேச்சுப் போட்டி, இந்தியாவின் புதுச்சேரி பல்கலைக்கழக மண்டப அரங்கத்தில் நாளை டிசம்பர் 2ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்குத் தொடங்கி மாலை 5 மணி வரை வெகு சிறப்பாக நடைபெறவிருக்கிறது.

எதிர்காலத்தில் எழுச்சிமிகு இளைய தலைமுறை தமிழ்ப் பேச்சாளர்களை, தமிழ்ப்பள்ளிகளிலிருந்து அடையாளம் கண்டு உருவாக்கும் உன்னத நோக்கத்தின் அடிப்படையில் ஆஸ்ட்ரோ வானவில்லும் வணக்கம் மலேசியாவும் இணைந்து மாணவர் முழக்கம்பேச்சுப் போட்டியை நடத்தி வருகின்றன.
                             
2011-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையில் தேசிய ரீதியில் இடம்பெற்று வந்த தமிழ்ப் பள்ளிகளுக்கான இந்த மாணவர் முழக்கம்பேச்சுப் போட்டி, பின்னர் தொடர்ந்து தேசிய ரீதியிலும் அனைத்துலக ரீதியிலும் நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாண்டு புதுச்சேரியில் நடைபெறும் அனைத்துலக மாணவர் முழக்கம் பேச்சுப் போட்டியில்மலேசியா, இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், பிரிட்டன், ஐக்கிய அரபு சிற்றரசு ஆகிய 6 நாடுகள் பங்கேற்கவுள்ளார்கள்.

கடந்த ஆண்டு துபாயில் அனனத்துலக மாணவர் முழக்கம் போட்டி நடந்த போது மலேசியா உள்பட இந்தியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் ஐக்கிய அரபுச் சிற்றரசு ஆகிய 5 நாடுகள் கலந்து கொண்டார்கள். இவ்வாண்டு இப்போட்டியில் அதிகமான நாடுகள் களமிறங்கவுள்ளார்கள்.

மலேசியாவில் தேசிய அளவில் நடத்தப்பட்ட 2017-ஆம் ஆண்டுக்கான மாணவர் முழக்கத்தில் வாகைச் சூடிய ஜொகூர், கங்கார் புலாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த ரவின் நாயக்கர், கெடா, பாயா புசார் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சரத் சுதாகர் மற்றும் ஜொகூர், மசாய் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சஸ்வின் ராஜ் மலேசியாவைப் பிரதிநித்து புதுச்சேரியில் நடக்கும் அனைத்துலக போட்டியில் கலந்து கொள்ள தயார் நிலையில் உள்ளனர். 


இம்மூன்று மாணவப் பேச்சாளர்களும் தற்போது தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கனளத் தயார்படுத்தும் பணிகளில் சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள் அயராது ஈடுபட்டு வருகின்றனர். இம்முனற அனனத்துலக
மாணவர் முழக்கம்பேச்சுப் போட்டியில் வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றி, முதல் நிலை வெள்ளியாளராக நாடு திரும்ப வேண்டும் என்ற உறுதிப்பாட்டுடன் மலேசிய மாணவர்கள் விரிவான பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment