Sunday 3 December 2017

2 நாடாளுமன்றத் தொகுதிகள், 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டி- ம.ம.ச. கட்சி கோரிக்கை

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் 2 நாடாளுமன்றத் தொகுதி, 3 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கோரிக்கை விடுத்தார்.

கடந்த தேர்தல்களில் தேசிய முன்னணி போட்டியிட்டு தோல்வி கண்ட இடங்களையே ம.ம.ச. கட்சி கோருகிறது. இத்தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால் நிச்சயம் தேசிய முன்னணிக்கு வெற்றி வாய்ப்பை பெற்று தருவோம்.

தேசிய முன்னணி தனது உறுப்புக் கட்சிகளில் துணையோடு தேர்தலில் களமிறங்குகிறது. அவ்வகையில் இரு நாடாளுமன்றத் தொகுதிகளிலும்  மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
நாளை 3ஆம் தேதி மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 9ஆவது பேராளர் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் முன்னிலையில் இந்த கோரிக்கை உட்பட பல கோரிக்கைகள் முன்வைக்கப்படவுள்ளன. அதுமட்டுமின்றி 2300 பேராளர்கள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் கட்சி உறுப்பினர்களுக்கு இனிப்பான செய்தி வழங்கப்படும் என ஒரு 'ரகசியத்தையும்' வைத்துள்ளார் டத்தோஶ்ரீ தனேந்திரன்.

14ஆவது பொதுத் தேர்தல் கேந்திரத்தை பிரதமர் நஜிப் தொடக்கி வைக்கும் இம்மாநாட்டில் சிறப்புப் பிரமுகராக இந்திய நாடாளுமன்றத்தின் மூத்த ஆலோசகர் டாக்டர் பி.ராமசாமியும் சசிகலா புஷ்பாவும் கலந்து கொள்ளவுள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment