Sunday 31 December 2017

'கடுமையான தலைவலியில் பாதிக்கப்பட்டிருந்தார் திருமதி சுமதி'- உறவினர் தகவல்


ஜோகூர்பாரு-
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த திருமதி சுமதி, தனது 10 வயது மகளை கழுத்து நெறித்து கொண்ட பின் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் பல நாட்களாக கடுமையான தலைவலியால் பாதிக்கப்பட்டிருந்தார்.

கடந்த வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனது மகளை கழுத்து நெறித்து கொன்றுவிட்டு திருமதி சுமதி தற்கொலை செய்துக் கொண்டதை கண்டு பதறி போன கணவர் கிருஷ்ணகுமார் போலீசில் புகார் அளித்தார்.

இச்சம்பவம் குறித்து பேசிய உறவினர் ஒருவர்,  'திருமதி சுமதி புற்றுநோயால் பாதிக்கப்பட்டது இவ்வாண்டு தொடக்கத்தில்தான் தெரிய வந்தது. அதற்காக அவர் பல சிகிச்சைகளையும் கீமோதெராபி சிகிச்சையும் மேற்கொண்டார். இதனால் கடுமையான தலைவலியில் அவதிபடுவதாக  என்னிடம் பலமுறை குறைபட்டு கொண்டார்' என கூறினார்.

திருமதி சுமதியின் கணவர் வேலைக்குச் சென்றுவிட்டதாலும் பள்ளித் தவணை தொடங்கவுள்ளதால் அவரின் 16, 19 வயதுடைய இரு மகன்களும் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க தம்போயிலுள்ள பேரங்காடிக்கு சென்றுள்ளனர்.

பின்னர் வீடு திரும்பிய சுமதியின் கணவர் கிருஷ்ணகுமார், வீட்டின் மேல் மாடியில் உயிரற்ற மகளின் உடலை கண்டுள்ளார்.  அவரின் மனைவி ஜிம் அறையில் தூக்கு மாட்டிக் கொண்டதை கண்டு அவர் அதிர்ச்சிக்குள்ளானார்.

No comments:

Post a Comment