Tuesday 21 August 2018

புரோட்டோன் -கீலி ஒப்பந்தத்திற்கு பக்காத்தான் அரசாங்கம் ஆதரவு- நஜிப் மகிழ்ச்சி


கோலாலம்பூர்-
சீனாவின் 'கீலி' நிறுவனம் புரோட்டோன் நிறுவனத்தின் 49.9% பங்குகளைக் கொண்டிருப்பதற்கு செய்து கொண்டுள்ள ஒப்பந்தத்திற்கு பிரதமர் துன் மகாதீர் முகமதுவும் பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கமும் ஒப்புதல் தெரிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று முன்னாள் பிரதமர்  டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் தெரிவித்தார்.

இதன் மூலம் 60,000 தொழில் வாய்ப்புகள் பாதுகாக்கப்பட்டுள்ளது எனவும் புரோட்டோன் நிறுவனத்தை புதிய வளர்ச்சிக்கு கொண்டுச் செல்ல வழிவகுக்கும் என அவர் பேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

கடந்த தேமு ஆட்சியின்போது மேற்கொள்ளப்பட்ட புரோட்டோன் - கீலி, ஃபோரெஸ்ட் சிட்டி ஆகிய திட்டங்களை விமர்சித்த துன் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் ஆகிய இன்று அவற்றை ஏற்றுக் கொண்டுள்ளன.

நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலின்போது இவ்விவகாரங்களை துன் மகாதீர் பெரும் சர்ச்சைகளாக உருமாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment