Saturday 25 August 2018

மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் காலமானார்

கோலாலம்பூர்-
மலேசியத் தமிழ் பத்தரிகை உலகில் 'பிதாமகன்' என்று அழைக்கப்படும் மூத்த பத்திரிகையாளர் எம்.துரைராஜ் அவர்கள் இன்று காலை காலமானார்.

தமிழ்ப் பத்திரிகை உலகம் நீண்ட அனுபவத்தையும் பல பத்திரகையாளர்களின் முன்னோடியாகவும் 'உதயம், இதயம்' மாத இதழ்களின் ஆசிரியராகவும் திகழ்ந்த எம்.துரைராஜ் அவர்களின் மறைவு தமிழ் பத்திரிகை துறையில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரின் நல்லடக்கச் சடங்கு வரும் 26ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 25 Jalan Udang Gantung Satu Taman Cuepacs Segambut 52000 Kuala Lumpur எனும் முகவரியில் நடைபெறவுள்ளது.

அன்னாரின் மறைவால் துயருற்றிருக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கு 'மை பாரதம் மின்னியல் ஏடு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.


No comments:

Post a Comment