Friday 17 August 2018

கேரளாவின் வெள்ளப் பேரிடரில் 67 பேர் பலி

கொச்சின்-
கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத பெரு வெள்ளத்தின் காரணமாக இதுவரை 67 பேர் உயிரிழந்தள்ளனர்.

தொடர்ந்து பெய்து வரும் அடைமழை காரணமாக கேரளா மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த மழை,  வெள்ளத்திற்கு இதுவரை 67 பேர் பலியாகியுள்ள நிலையில் 50,000 பேர் கட்டாய சூழலில் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழையின் காரணமாக 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடர் காரணமாக கொச்சின் விமான நிலையத்தின் முதன்மை வாயில் வரும் சனிக்கிழமை வரை மூடப்பட்டிருக்கும் என்று கேரளா மாநில முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.

மேலும், கேரளா மாநிலத்தைச் சூழ்ந்துள்ள வெள்ளப் பேரிடர் தொடர்பில் பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அவர் சொன்னார்.





No comments:

Post a Comment