Saturday 18 August 2018

அனைத்து 'ஏஇஎஸ்' அபராதங்கள் ரத்து செய்யப்படுகின்றன- போக்குவரத்து அமைச்சர்


கோலாலம்பூர்-
இன்னமும் செலுத்தப்படாத 'ஏஇஎஸ்' எனப்படும் மின்னியல் தானியங்கி முறை சம்மன்களை ரத்து செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் சாலை போக்குவரத்து இலாகாவின் (ஜேபிஜே) கீழ் விதிக்கப்பட்ட அபராதத் தொகைகள் மட்டுமின்றி கேமரா செயல்பாடும் முழுமையாக அகற்றப்படும் என அவர் சொன்னார்.

வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் ஏஇஎஸ் சார்ந்த இரு நிறுவனங்களின்  ஒப்பந்தங்கள் நிறைவு பெறுகின்றன.

இதற்கு முன்னர் விதிக்கப்பட்ட அபராதங்களை அதிகமானோர் செலுத்தாததோடு அவற்றை ரத்து செய்வதாக அவர் சொன்னார்.

இதுவரை 3.1 மில்லியன் ஏஇஎஸ் அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன எனவும் அவற்றின் மதிப்பு 435 மில்லியன் வெள்ளி மதிப்பு ஆகும் எனவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment