Wednesday 22 August 2018

உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பா? சோதனை நடத்தப்படும்- சிவநேசன்

ரா.தங்கமணி

ஈப்போ-
கம்பாரிலுள்ள போக்குவரத்து நிறுவனம் ஒன்றில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு போதிய வேலை வாய்ப்பு வழங்க மறுக்கும் நிறுவனத்தில் அடுத்த வாரம் பரிசோதனை நடத்தப்படும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

இந்நிறுவனத்தில் லோரி ஓட்டுநராக  கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த ஏ.சுப்பிரமணியம் (வயது 48), ஈராண்டுகளாக பணியாற்றி வரும் லோகநாதன் (வயது 32) ஆகியோருக்கு கடந்த இரு மாதங்களாக வேலை வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் இதனால் இரு மாதங்களாக ஊதியம் இன்றி தவிப்பதாகவும் சிவநேசனிடம் முறையிட்டனர்.

உள்ளூர் தொழிலாளர்களாக எங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்காமல் அந்நியத் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதாகவும் அந்த அந்நியத் தொழிலாளர்களிடம் லோரி ஓட்டுனர் உரிமம் (லைசென்ஸ்) இல்லை எனவும் தெரிவித்தனர்.

இவ்விவகாரம் குறித்து கருத்துரைத்த சிவநேசன், சம்பந்தப்பட்ட நிறுவனத்தை நேரடியாக களமிறங்கி ஆய்வு செய்யப்படும் எனவும் ஜேபிஜே, தொழிலாளர் இலாகா ஆகிய தரப்பினருடன் இணைந்து சோதனை நடத்தப்படும் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment