Saturday 18 August 2018

தீபாவளிச் சந்தையை லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கம் ஏற்று நடத்தும்- சிவசுப்பிரமணியம்

ரா.தங்கமணி

ஈப்போ-
இவ்வாண்டு ஈப்போ லிட்டில் இந்தியா தீபாவளிச் சந்தையை ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கம் முழுமையாக ஏற்று நடத்தவுள்ளது புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி. சிவசுப்பிரமணியம் தெரிவித்தார்.

பேரா மாநில அரசாங்கத்தின் தலைமையில் நடைபெறவுள்ள இந்த தீபாவளிச் சந்தை நடத்தப்படவுள்ளது.

கடந்த 8 ஆண்டுகளாக விடுக்கப்பட்டு  வந்த இந்த கோரிக்கையை பேரா மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் ஏற்று கொண்டு இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.

இம்முறை 14 நாட்களுக்கு நடத்தப்படும் தீபாவளி வர்த்தகச் சந்தையில் உள்ளூர் வியாபாரிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும் என கூறிய சிவசுப்பிரமணியம், வியாபாரிகளுக்கு நியாயமான விலையில் கடைகள் வழங்கப்படும் என்றார்.

ஈப்போ வட்டாரத்தில் உள்ள வியாபாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கடைகள் காலியாக இருந்தால் பிறருக்கு வழங்க பரிசீலிக்கப்படும் எனவும் அவர் சொன்னார்.

ஈப்போ லிட்டில் இந்தியா வணிகர்கள் சங்கத்துடன் பேரா மாநில இந்து சங்கம், ஈப்போ கடலை வியாபாரிகள் சங்கம் உட்பட பல தரப்பினருடன் இணைந்து இந்நிகழ்வ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அதன் தலைவர் திருமதி கலா குறிப்பிட்டார்.

கடைகளுக்கு முன்னர் அமைக்கப்படும் கூடாரங்களில் கடை உரிமையாளர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அதனை அவர்கள் ஏற்காத சூழலில் வேறு யாருக்கு அதனை வழங்க வேண்டும் என்பதை வணிகர்கள் சங்கம் தீர்மானிக்கும் என அவர் சொன்னார்.

மேலும், இந்த தீபாவளிச் சந்தையில் இந்தியர்களின் கலாச்சார நிகழ்வை பிரதிபலிக்கும் வகையில் மாநில இந்து சங்கத்திற்கு 3 நாள் நிகழ்வு நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதனை சிறப்பான முறையில் இந்து சங்கம் ஏற்பாடு செய்யும் எனவும் அதன் தலைவர் பொன்.சந்திரன் சொன்னார்.

இச்சந்திப்பில் போலீஸ், ஈப்போ மாநகர் மன்றம், சுங்கத்துறை, வர்த்தகர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment