Sunday 26 August 2018

அனைத்து மாணவர்களின் கல்வித் தரத்திலும் கவனம் செலுத்துக- சிவநேசன் அறிவுறுத்து


ரா.தங்கமணி

ஈப்போ-
கல்வி தேர்ச்சி விகிதத்தில் 'ஏ' பெறுவதை காட்டிலும் அனைத்து மாணவர்களும் கல்வித் தரத்தில் சிறந்தவர்களாக உருவாக வேண்டியதே தற்போதைய அவசியமாகும் என்று பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் குறிப்பிட்டார்.

மாணவர்கள் கல்வித் தரத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே மிக முக்கியமானதாகும். 4, 5 மாணவர்கள் மட்டும் அனைத்து பாடங்களிலும் 'ஏ' தேர்ச்சி பெற்று பிற மாணவர்கள் கல்வியில் பின் தங்குவது ஆக்ககரமானதாக கருத முடியாது.

அனைத்து மாணவர்களும் 'ஏ' தேர்ச்சி பெறுவதை வரவேற்கிறோம். ஆனால் சில மாணவர்கள் மட்டும் தேர்ச்சி பெற்று பிற மாணவர்கள் கல்வியில் பின்தங்குவது ஏற்புடையதல்ல.

இதனை பள்ளியில் உள்ள ஆசிரியர்கள் கவனத்தில் கொண்டு அனைத்து மாணவர்க்ளின் கல்வித் தரமும் ஏற்றம் காண முயற்சிக்க வேண்டும் என்று இன்று மாநில அரசு செயலகத்தில் நடைபெற்ற 'பேரா மாநில தமிழ்ப்பள்ளிக் கல்வி, மேம்பாட்டு கருத்தரங்கில் உரையாற்றியபோது சிவநேசன் இவ்வாறு கூறினார்.

'ஏ' மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு பாட போதனை மேற்கொள்ளப்படக் கூடாது, மாறாக அனைத்து மாணவர்களின் கல்வித் தரத்தையும்  கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் செயல்பட வேண்டும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் மக்களவை துணை சபாநாயகர் ஙா கோர் மிங், பேரா மாநில கல்வி ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் அஸிஸ் பாரி, மாநில கல்வி இலாகா இயக்குனர் ரஹிமா, இம்மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், துணை தலைமையாசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment