Monday 27 August 2018

தமிழ்ப்பள்ளி தேசிய அமைப்பாளர் பதவி காலி? கல்வி அமைச்சருடன் கலந்தாலோசிக்கப்படும்- சிவகுமார்


ரா.தங்கமணி

ஈப்போ-
தமிழ்ப்பள்ளிகளின் தேசிய அமைப்பாளர் பதவி தற்போது காலியாகி விட்ட நிலையில் அப்பதவிக்கு புதியவரை நியமிப்பது தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்தாலோசிப்பேன் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வீ.சிவகுமார் தெரிவித்தார்.

இப்பதவியில் முன்பு இருந்த பாஸ்கரன் அப்பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் அப்பதவிக்கு இன்னமும் வேறொருவர் நியமிக்கப்படாமலே உள்ளார்.

இது குறித்து பல்வேறு கேள்விகள் எழுகின்ற நிலையில் இவ்விவகாரம் குறித்து கல்வி அமைச்சரிடம் பேசுவேன் என்று சிவகுமார் கூறினார்.

இந்திய சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் கல்வி பிரிவுக்கு பொறுப்பேற்றிருக்கும் சிவகுமார், இந்தியர்களின் கல்வி விவகாரங்களில் ஆக்ககரமான திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment