Friday 23 November 2018

சிறார், மகளிருக்கு எதிரான சமூகச் சீர்கேடுகள்- விட்டுக் கொடுக்கும் போக்கு கடைபிடிக்கப்படாது


கோலாலம்பூர்-
சிறார், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோருக்கு எதிரான சமூக சீர்கேடு நடவடிக்கைகளில் அரசாங்கம் ஒருபோதும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ வான் அஸிஸா வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

இவர்களுக்கு எதிரான சமூக சீர்கேடுகளை களைவதற்கு நாடாளுமன்ர உறுப்பினர்கள், அரசு சார்பற்ற பொது இயக்கத்தினர் ஆகியோர் ஒருங்கிணந்து செயலாற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சிறார், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், பெண்கள் ஆகியோரை உட்படுத்திய சமூகப் பிரச்சினைகளே எனக்கு முதன்மையானது. அதில் எவ்வித விட்டுக் கொடுக்கும் போக்கையும் நான் கடைபிடிக்கப்போவதில்லை என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment