Tuesday 27 November 2018

சீபில்ட் ஆலய மோதல்; 7 பேர் கைது- போலீஸ்


சுபாங் ஜெயா-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஏற்பட்ட மோதல் தொடர்பில் போலீசார் ஏழு பேரை கைது செய்துள்ளனர்.

அதிகாலை 3.00 மணியளவில் நிகழ்ந்த இந்த மோதலில் காயமடைந்து செர்டாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் கைது செய்யப்பட்டனர். எஞ்சிய ஐவர் கோலாலம்பூர், சிலாங்கூர் பகுதிகளில் கைது செய்யப்பட்டனர்.

இவ்விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உதவும் பொருட்டு இவர்கள் கைது செய்யப்பட்டதாக சிலாங்கூர் மாநில போலீஸ் படைத் தலைவர் டத்தோ மஸ்லான் மன்சோர் தெரிவித்தார்.

இரு தரப்பினருக்கு இடையிலான மோதலில் 18 வாகனங்களும் இரு மோட்டார் சைக்கிள்களும் தீயிட்டு கொளுத்தப்பட்டன. அதோடு கற்கள் வீசியெறிந்ததில் போலீசாரின் ரோந்து வாகனம் ஒன்றும் சேதமடைந்தது.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆதலால் எந்தவொரு தரப்பினர் சட்டத்தை மீறி செயல்பட வேண்டாம்.

இங்கு ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலை களைவதற்கு கலக தடுப்பு போலீஸ் படையைச் சேர்ந்த 700 பேர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

இதில் எவ்வித இன மோதல்களும் இல்லை என குறிப்பிட்ட அவர், சில தரப்பினருக்குள் ஏற்பட்ட கைகலப்பு விவகாரமே ஆகும் என்றார்.

No comments:

Post a Comment