Wednesday 28 November 2018

ஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தானுக்கு கொடுக்க விரும்பவில்லை- டான்ஶ்ரீ விக்னேஸ்வரன்


கோலாலம்பூர்-
முந்தைய அரசாங்கம் எதிர்கொண்ட ஹிண்ட்ராஃப் அனுபவத்தை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்திற்கு கொடுக்க மஇகா விரும்பவில்லை என்று அதன் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் போராட்டம் எவ்வளவு கொடுமையானது என்பது எங்களுக்கு தெரியும். அதே போன்ற மற்றொரு பிரச்சினையை நடப்பு அரசாங்கத்திற்கு கொடுக்க விரும்பவில்லை.

ஆலயங்களில் நிலவும் இனவாதப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் தோல்வி கண்டுள்ளார் என்று செனட்டர் வேதமூர்த்தியை குறைகூற விரும்பவில்லை.

நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராஃப் தனது ஆண்டு விழாவை கொண்டாடிய வேளையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. எத்தகைய வெறுப்பு அரசியலை உண்டாக்கினார்களோ அதேதான் இப்போது கிடைத்துள்ளது.

இச்சம்பவம் ஓர் இனவாத மோதல் கிடையாது என்று கூறிய அவர், கோயில் வளாகத்தில் திரண்டு சூழ்நிலையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்று விக்னேஸ்வரன் மேலும் சொன்னார்.

ஆலய உடைப்பு நடவடிக்கைகளை கண்டித்து 2007 நவம்பர் 25ஆம் தேதி ஹிண்ட்ராஃப் பேரணி நடத்தியதில் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் பங்கேற்றது மலேசிய அரசியலில் மாபெரும் மாற்றத்திற்கு வித்திட்டது.

No comments:

Post a Comment