Friday 23 November 2018

தீ விபத்து; பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்கப்படும்- திருமதி செல்வி


சுங்கை சிப்புட்-
இன்று காலையில் நிகழ்ந்த தீ விபத்தில் வீடுகளை இழந்தவர்களுக்கு பேரா, சுங்கை சிப்புட் மகளிர் மேம்பாட்டு கழகத்தின் தலைவி திருமதி செல்வி ஆறுதல் கூறினார்.

இந்த தீ விபத்தில் வீடுகளை பறிகொடுத்த மூன்று குடும்பத்தினர் உடைமைகளையும் ஆவணங்களையும் இழந்துள்ளனர். இவர்களுக்கு வேண்டிய உதவிகள் கழகத்தின் சார்பில் முன்னெடுக்கப்படும் என திருமதி செல்வி குறிப்பிட்டார்.

ஜாலான் லிந்தாங், பேரா ஹைட்ரோ குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 3 வீடுகள் முற்றாக எரிந்தது.

No comments:

Post a Comment