Friday 23 November 2018

'வேதா- என்னை போல் ஒருவர்' - துன் மகாதீர்

செர்டாங்-
பதவி விலகுமாறு பல்வேறு தரப்பினர் நெருக்குதல் கொடுத்து வரும் பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தியை பிரதமர் துன் மகாதீர் தற்காத்து பேசியுள்ளார்.

'அவரும் என்னை போல் தான். கடந்த காலங்களில் பேசிய விவகாரத்தை இப்போது சர்ச்சையாக்கி பதவி விலகுமாறு நெருக்குதல் கொடுப்பது ஏற்புடையதாகாது.

முன்பு நானும் அம்னோவில் தான் இருந்தேன். இப்போது இங்கு இருக்கிறேன். அதனால் பக்காத்தான் ஹராப்பானில் இணைய முடியாது என கூறினால் அதை ஏற்க முடியாது.

அதே போன்றுதான் வேதமூர்த்தியும் 10 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய சூழலுக்கு ஏற்ப கருத்து தெரிவித்துள்ளார். இப்போது அவர் அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ளார்.

அப்போது அவர் கூறிய கருத்து முந்தைய காலங்களில் உள்ள சூழலை பொறுத்தது. அதை இப்போது சர்ச்சையாக்கி பதவி விலகுமாறு கோரிக்கை விடுப்பது ஏற்கத்தக்கது அல்ல என்று துன் மகாதீர் தெரிவித்தார்.

2007ஆம் ஆண்டு நடைபெற்ற ஹிண்ட்ராஃப் போராட்டத்திற்கு பின்னர் டச்சு ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் மலேசியாவில் இந்தியர்கள் ஓரங்கட்டப்படுவதாகவும் அவர்களின் உரிமைகளும் சலுகைகளும் நசுக்கப்படுவதாகவும் வேதமூர்த்தி கூறியிருந்தது இப்போது சர்ச்சையாக மூண்டுள்ளது.

No comments:

Post a Comment