Thursday 29 November 2018

சீபில்ட் ஆலய மோதலை துரிதமாக விசாரிக்க வேண்டும்- மணிமாறன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
சீபில்ட் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் சம்பவம் குறித்து போலீசார் துரிதமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன் வலியுறுத்தினார்.

இந்நாட்டில் நிலவும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் கண்டிக்கத்தக்கது என்பதோடு இது நாட்டின் அமைதியை சீர்குலைத்து விடும்.

இவ்விவகாரத்தில் குண்டர் கும்பலை ஏவி விட்டு இந்தியர்கள் மீது தாக்குத நடத்த மூளையாக செயல்பட்ட தரப்பினர் சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவது அவசியமாகும்.

இந்த விவகாரத்தில் போலீசார் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காமல் துரிதமான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சுங்கை சிப்புட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்த பின்னர் மணிமாறன் இவ்வாறு கூறினார்.

இந்த போலீஸ் புகாரின்போது சுங்கை சிப்புட் மஇகா தலைவர் ராமகவுண்டர், துணைத் தலைவர் சேகரன் உட்பட கிளைத் தலைவர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment