Wednesday 28 November 2018

பொறுமை காப்போம்- கணபதிராவ் வலியுறுத்து


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டின் அமைதிக்கும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கும் பாதகம் ஏற்படா வண்ணம் அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வலியுறுத்தினார்.

சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நேற்று அதிகாலை நிகழ்ந்த மோதல் சம்பவம் இந்தியர்களிடையே ஒரு பதற்றமான சூழலை உருவாக்கியுள்ளது.

இந்த சம்பவம் இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும் நாட்டின் அமைதிக்கு பங்கம் ஏற்படாத வண்ணம் அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இன துவேஷக் கருத்துகள் பகிர்வதோ, மக்கள் மத்தியில் அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதையோ மக்கள் கைவிட வேண்டும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment