Friday 23 November 2018

தீ விபத்து; 4 வீடுகள் தீக்கிரை


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இங்குள்ள ஜாலான் லிந்தாங், பேரா ஹைட்ரோ குடியிருப்பில் நிகழ்ந்த தீ விபத்தில் 4 வீடுகள் தீக்கிரையாயின.

இன்று காலை 11.30 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் வீடுகளில் இருந்த பொருட்கள் அனைத்தும் சேதமடைந்தன. உயிருடற்சேதம் ஏதும் ஏற்படவில்லை.

தகவல் கிடைக்கப்பெற்று சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

No comments:

Post a Comment