Saturday 24 November 2018

தீபாவளி உபசரிப்பு கலைநிகழ்ச்சியாக மாற்றம் கண்டது ஏன்?

ரா. தங்கமணி

கோலாலம்பூர்-
புத்ராஜெயாவை கைப்பற்றிய பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முதன் முதலாக ஏற்பாடு செய்த தீபாவளி உபசரிப்பு கலை நிகழ்ச்சியாக மாற்றப்பட்டது ஏன்? என்ற கேள்வி எழுகிறது.

தேசிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்வில் தென்னிந்திய நடிகர்கள், கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர் என்ற தகவல் மக்கள், மலேசிய கலைஞர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை உருவாக்கியது.

இந்நிகழ்வுக்கு சமூக ஊடகங்களின் வாயிலாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட பின்னர் இப்போது 'எக்ஸ்போ கிளேங்-சென்னை' நிகழ்ச்சி பெயர் மாற்றப்பட்டு அதில் பங்கேற்கும் சில உள்ளூர் கலைஞர்களின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன.

தென்னிந்திய நடிகர்களைக் கொண்டு வந்து நிகழ்ச்சி நடத்த வேண்டிய அவசியம் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு ஏன் ஏற்பட்டது?
நாட்டின் கடன் பிரச்சினையை பெரிய விவகாரமாக பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் தென்னிந்திய கலைஞர்களை பங்கேற்க செய்யும் நிகழ்ச்சி தேவைதானா? என்ற கேள்வி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற எண்ணத்திலேயே இந்தியர்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு வாக்குகள் அளித்த நிலையில், தென்னிந்திய கலைஞர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியால் இந்திய சமுதாயத்திற்கு மேம்பாடு கண்டுவிடுமா? என்பதற்கு பக்காத்தான் தலைவர்களே பதில் கூற வேண்டும்.

No comments:

Post a Comment