Friday 23 November 2018

தீ விபத்தில் வீடிழந்தவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும் - கேசவன்

ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
ஜாலான் லிந்தாங், பேரா ஹைட்ரோ குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்த தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு வேண்டிய உதவிகள் வழங்கப்படும் என்று சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.கேசவன் தெரிவித்தார்.

இன்று காலை நிகழ்ந்த தீ விபத்தில் 3 வீடுகள் 90 விழுக்காடு சேதமடைந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதற்கட்டமாக கோலகங்சார் மாவட்ட அலுவலகத்தின் மூலம் தலா ஒரு குடும்பத்தினருக்கு 2,000 வெள்ளி நிதியுதவி வழங்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறி கொள்ளும் அதே வேளையில் நாடாளுமன்ற உறுப்பினர் எனும் முறையில் இவர்களுக்கு வேண்டிய உதவிகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று கேசவன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment