Tuesday 27 November 2018

குண்டர்களை ஏவி விட்டது யார்?- கணபதிராவ் ஆவேசம்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்துள்ள இரு தரப்புக்கு இடையிலான கைகலப்பில் பிற இனத்தைச் சேர்ந்த குண்டர்களை ஏவி விட்டது யார்? என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கேள்வி எழுப்பினார்.

இடமாற்றப் பிரச்சினையை எதிர்கொண்டிருந்த இவ்வாலயத்தில் நிர்வாகப் பிரச்சினை நிலவுவது உள்விவகாரமாகும். அது ஒரு ஒரு இனத்துக்குள் நிலவிய பிரச்சினை.

ஆனால் இவ்வாலயத்திகுள் அத்துமீறி நுழைந்த பிற இனத்தவர் நுழைந்து மோதலை உண்டாக்கியது ஏற்புடையது அல்ல. ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்த அவர்கள், அவர்களது சமய சுலோகங்களை கூறி நமது இந்தியர்களை தாக்கியது அநாகரீகமாகும்.

ஆலயத்தில் திரண்டிருந்த பெண்கள், குழந்தைகள் மீது கை வைத்தவர்கள் யாராக இருந்தாலும் அதை ஒருபோதும் ஏற்க முடியாது.

இந்த ஆலய விவகாரத்தில் பிற இனத்தவர்ர்கள் தலையிட்டது இந்நாட்டில் நிலவி வரும் சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தி சீர் குலைக்கும் வகையில் அமைந்துள்ளது.

அதோடு, இவ்விவகாரத்தை மிக கடுமையாக கருதி போலீஸ் படையினர் சம்பந்தப்பட்ட தரப்பினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனங்களுக்கிடையிலான பதற்றத்தை ஏற்படுத்த யார் முயன்றாலும் அது கண்டிக்கப்பட வேண்டியாதாகும் என்று கணபதிராவ் மேலும் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment