Wednesday 28 November 2018

சீபில்ட் ஆலய மோதல்; நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார்கள்


கோலாலம்பூர்-
சீபில்ட் ஆலயத்திற்குள் புகுந்த குண்டர் கும்பலால் நிகழ்த்தப்பட்ட வன்முறை மோதல் நாடு தழுவிய நிலையில் இந்தியர்களிடையே மிகப் பெரிய ஆதங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று அதிகாலை ஆலயத்தில் திரண்டிருந்த இந்தியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இவ்விவகாரம் சமூக ஊடகங்களில் வைரலானதைத் தொடர்ந்து இந்தியர்களிடையே அதிருப்தி அலை மேலோங்கியது.

ஆலயத்திற்குள் அத்துமீறி நுழைந்து  அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட குண்டர் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி நாடு தழுவிய நிலையில் போலீஸ் புகார்கள் செய்யப்பட்டன.

போலீஸ் புகார் செய்தவர்கள் சமூக ஊடகங்களில் அதை பதிவிட்டு இச்சம்பவத்திற்கு கடுமையான கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment