Tuesday 27 November 2018

சீபில்ட் ஆலய கலவரம்; அனைவரும் பொறுமை காக்க வேண்டும்- வேதமூர்த்தி


கோலாலம்பூர்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த மோதல் குறித்து அனைத்துத் தரப்பினரும் பொறுமை  காக்க வேண்டும் என்று பிரதமர் துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

இன்று அதிகாலை நிகழ்ந்த இந்த மோதல் சம்பவம் குறித்து  போலீஸ் படை துணைத் தலைவர் டான்ஶ்ரீ நோர் டஷீட் இப்ராஹிமுடன் கலந்தாலோசித்து வருவதாகவும் போலீசாரும் தக்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் சொன்னார்.

சீபில்ட் ஆலயத்தில் நுழைந்த கும்பல் ஒன்று இந்தியர்களை தாக்கிய சம்பவம் தொடர்பில் உணர்ச்சி வசப்படாமல் அனைத்துத் தரப்பினரும் பொறுமை காக்க வேண்டும் என்று வேதமூர்த்தி கேட்டுக் கொண்டார்.

இவ்விவகாரம் தொடர்பில் போலீசார் தங்களது நடவடிக்கையை துரிதப்படுத்துவர் என கூறிய  அவர், இது தொடர்பில் டான்ஶ்ரீ நோர் டஷீட் இப்ராஹிம்டம் வல்லியுறுத்தி உள்ளதாகவும் அவர் சொன்னார்.

No comments:

Post a Comment