Tuesday 27 November 2018

வன்முறையை தூண்டியவர்கள் சட்டத்தின் பிடியில் தப்பக்கூடாது- டத்தோஶ்ரீ சரவணன்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
சீபில்ட் ஆலயத்தில் நுழைந்து இந்தியர்களை தாக்கிய தரப்பினர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் வலியுறுத்தினார்.

இந்திய சமுதாயத்தை அச்சுறுத்தும் வகையில் நடந்துக் கொண்ட சம்பந்தப்பட்ட தரப்பினர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாய்வதில் தயக்கம் காட்டக்கூடாது.
அண்மையில் சிறிய கத்தியை வைத்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்ததாக கூறி இந்திய இளைஞர் ஒருவரை போலீசார் சுட்டுக் கொல்லும்போது பாரங் கத்திகளையும் ஆயுதங்களையும் கொண்டு  இந்தியர்களை அச்சுறுத்திய தரப்பினர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசியல் நாடகம் இன்றி இனங்களுக்கிடையிலான பதற்றத்தை ஏற்படுத்த முயலும் வகையில் நடத்தப்பட்ட வன்முறை தாக்குதலே இது. இதற்கு நடப்பு அரசாங்கமும் போலீஸ் படையும் உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று முன்னாள் துணை அமைச்சருமான டத்தோஶ்ரீ சரவணன் கூறினார்.

No comments:

Post a Comment