Friday 23 November 2018

நஜிப் ஆட்சியில் கூட இப்படி இல்லையே... பக்காத்தானுக்கு என்ன ஆனது?


ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
"மலேசியா மலேசியர்களுக்கே" என்று நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் வரை மேடை போட்டு முழங்கிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் நடவடிக்கைகள் தற்போது மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறது.

நாட்டின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய பக்காத்தான் ஹரப்பான் இவ்வாண்டு ஏற்பாடு செய்துள்ள தேசிய தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் தென்னிந்திய கலைஞர்களுக்கு வாய்ப்பளித்துள்ளது இப்போது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது.

வரும் 25ஆம் தேதி கிள்ளானில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில் தென்னிந்தி சினிமா நடிகர்களான விக்ரம், ஐஸ்வர்யா டுத்தா, யாஷிகா ஆனந்த், ஜனனி ஐயர், ரித்விகா ஆகியோர் பங்கேற்கவுள்ளனர் என்ற தகவல் இங்குள்ள இந்தியக் கலைஞர்களிடையே அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

தேசிய அளவில் கொண்டாடப்படும் ஒரு நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களுக்கு வாய்ப்பளிக்காமல் வெளிநாட்டு கலைஞர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் நோக்கம் என்ன? என்பதே கலைஞர்களின் கேள்வியாக உள்ளது.
இந்த தீபாவளி கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்துள்ள மலேசிய சுற்றுலா துறை உள்ளூர் கலைஞர்கள் புறந்தள்ளுவது ஏன்?

நாட்டின் கடன் 1 டிரில்லியன் வரை உள்ளது என கூறிய பல மக்கள் நலத் திட்டங்களை ஒத்தி வைத்திருக்கும் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம், வெளிநாட்டு கலைஞர்களைக் கொண்டு நிகழ்ச்சி படைக்கலாமா?

இந்நிகழ்வில் பங்கேற்கும் கலைஞர்கள் இலவசமாகவா பங்கேற்கின்றனர்? அவர்களுக்கு உரிய பணம் கொடுக்க தயாராக இருக்கும் போது நாட்டின் கடன் பிரச்சினைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லையா?

கடந்த தேசிய முன்னணியின் ஆட்சியில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தலைமைத்துவத்திலான அரசு ஏற்பாடு செய்த தேசிய அளவிலான தீபாவளி கொண்டாட்ட நிகழ்வில் உள்ளூர் கலைஞர்களுக்கே வாய்ப்பளிக்கப்பட்ட நிலையில் இப்போது பக்காத்தான் ஹரப்பான் அரசு ஏன் இப்படி செய்கிறது? என்ற கேள்வி எழுகிறது.

No comments:

Post a Comment