Thursday 29 November 2018

தீயணைப்பு வீரரை இந்தியர்கள் தாக்கவில்லை; உதவியுள்ளனர்- வைரலாகும் வீடியோ

கோலாலம்பூர்-
சீபில்ட் ஆலய மோதலில் படுங்காயமடந்து மருத்துவமணையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்புப் படை வீரரை இந்தியர்கள் தாக்கவில்லை; மாறாக அவருக்கு உதவியுள்ளனர் என்ற காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.

கடந்த 26ஆம் தேதி ஆலய வளாகத்தில் நடந்த மோதலையடுத்து, அன்று இரவு மீண்டும் ஏற்பட்ட சச்சரவில் தீயணைப்பு வாகனம் தாக்கப்பட்டது.

இச்சம்பவத்தின்போது, விபத்துக்குள்ளாகி கிடந்த முகமட் அடிப் முகமட் காசிம் என்ற தீயணைப்பு வீரரை  இந்தியர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆடவரை இந்தியர்கள் தாக்கினர் என பரவலாக பேசப்பட்ட நிலையில், விபத்துக்குள்ளானதால் அவர் படுங்காயமடைந்தார்.

முகமட் அடிப்பை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல இந்தியர்கள் வாகன உதவியை கோரி அவரை தூக்கிச் செல்லும் காட்சிகள் அடங்கிய காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment