Wednesday 28 November 2018

சீபில்ட் ஆலய எதிரொலி; ஓன் சிட்டி அலுவலகத்தின் மீது தாக்குதல்


ஷா ஆலம்-
சீபில்ட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் ஒரு குண்டர் கும்பல் நுழைந்து அராஜகத்தில் ஈடுபட்ட 24 மணி நேரத்திற்குள்ளாக மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது.

நேற்று அதிகாலை பிற இனத்தவர்கள் அடங்கிய குண்டர் கும்பல் பாரங் கத்தி, ஆயுதங்களைக் கொண்டு ஆலயத்தில் இருந்த இந்தியர்களை அடித்து காயப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து இந்தியர்கள் அதிகமாக திரண்டு அந்த குண்டர் கும்பலை விரட்டியடித்தனர்.

இனக் கலவரம் போன்று உருவகப்படுத்திய இந்த சம்பவத்தினால் நேற்று இரவு மீண்டும் அதிகமான இந்தியர்கள் ஆலய வளாகத்தில் திரண்டனர்.
அதிகாலை 1.00 மணியளவில் ஒரு கும்பல் வாகனங்களுக்கு தீயிட்டும் தீயணைப்பு வண்டி மீது கற்கள் வீசியும் சேதப்படுத்தியது.

மேலும், அதிகாலை 2.00 மணியளவில் மற்றொரு கும்பல் ஆலயத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஓன் சிட்டி நிறுவனத்தின் அலுவலக கட்டடத்தை கற்கள் வீசி சேதப்படுத்தியது. இதில் அலுவலகத்தில் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தன.

ஆயினும், போலீசார் துரிதமாக செயல்பட்டு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இச்சம்பவத்தில் தீயணைப்பு அதிகாரி ஒருவர் படுகாயமடைந்தார்.

No comments:

Post a Comment