Thursday 26 April 2018

மைபிபிபி கட்சியின் இடைக்காலத் தலைவரானார் டத்தோஶ்ரீ மெக்லின்


பெட்டாலிங் ஜெயா-
மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவராக டத்தோஶ்ரீ மெக்லின் டி குரூஸ் செயல்படுவார் என அக்கட்சியின் தலைமைச் செயலாளர் டத்தோ மோகன் கந்தசாமி அறிவித்தார்.

மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் பதவியிலிருந்து டான்ஶ்ரீ எம்.கேவியஸ் விலகுவதாக அறிவித்துள்ள நிலையில், அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார் என அவர் அறிவித்தார்.

இந்நிலையில் கட்சியின் முதன்மை உதவித் தலைவராக பதவி வகிக்கும் டத்தோஶ்ரீ மெக்லின் டி குரூஸ் கட்சியின் இடைக்கால தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் எனவும் அந்த நியமனம் உடனடியாக அமலுக்கு வருகிறது எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment