Sunday 26 November 2017

60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் பிரதமரையும் மஇகா தலைவரையும் ஆதரிக்கக்கூடாதா? - டான்ஶ்ரீ கேவியஸ் கேள்வி

வி.மோகன்ராஜ்

கோலாலம்பூர்-
60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆதரிக்க வேண்டாம் என கூறும் இளைஞர், விளையாட்டு துணை அமைச்சர் டத்தோ எம்.சரவணன், நாட்டின் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக்கும்  மஇகா தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ எம்.சுப்பிரமணியமும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதை மறந்து விட்டாரா? என மைபிபிபி கட்சியின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எம்.கேவியஸ் கேள்வி எழுப்பினார்.

'கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஆதரிக்க வேண்டாம்; துடிப்புமிக்க ஓர் இளைஞருக்கு ஆதரவு வழங்குங்கள்' என மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ள டத்தோ சரவணன், நாட்டின் பல்வேறு தலைவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.

கடந்த 2008ஆம் ஆண்டு சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட துன் (டத்தோஶ்ரீ) சாமிவேலுகூட அப்போது 60 வயதுக்கு மேற்பட்டவர்தான்.  அவரை போட்டியிட வேண்டாம் என ஏன் அப்போது தடுக்கவில்லை? நாட்டின் பிரதமரும் மஇகா தலைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். அதை மறந்து பேச வேண்டாம் என டத்தோ சரவணனிடம் கூறிக் கொள்கிறேன்.

கேரமன் மலை தொகுதியில் போட்டியிடுவதற்கு நான் முடிவெடுத்து விட்டேன். எக்காரணம் கொண்டும் அந்த முடிவிலிருந்து பின்வாங்கப் போவதில்லை என நேற்று மைபிபிபி தலைமையகத்தில் நடைபெற்ற மத்திய செயலவை கூட்டத்தின்போது டான்ஶ்ரீ கேவியஸ் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment