Wednesday 8 November 2017

நட்பின் அடிப்படையில் பினாங்கு முதல்வரை சந்தித்தார் இளவரசர் சார்ல்ஸ்


சுகுணா முனியாண்டி 
பினாங்கு-

கடந்த 20 ஆண்டுகளுக்குப் பிறகு பினாங்கைப் புரட்டி ப் போட்டிருக்கும் கனத்த மழையும் வெள்ளமும் இம்மாநில மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாகிய நிலையில்  பிரிட்டன்  இளவரசர் சார்ல்ஸ்- டச்சஸ் பினாங்கிற்கு அதிகாரபூர்வ வருகை மேற்கொண்டுள்ளனர்  .

காலை 8.00 மணியளவில், ராயல் ஏர் ஃபோர்ஸ் விமானம் மூலம்  இளவரசர் சார்ல்ஸ்,  கார்ன்வாலின் டச்சஸ் பாயன் லேபாஸில் பினாங்கு
அனைத்துலக  விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர் .

ராயல் தம்பதியினரை முதலமைச்சர் லிம் குவான் எங், அவரது மனைவி பெத்தி கூவ் ஆகியோர் அன்பாக வரவேற்றனர்.

 மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சபாநாயகர் டத்தோ லாவ் சு கியாங், மாநிலச் செயலாளர் டத்தோ ப்ராசான் டாரஸ், ​​பினாங்கு மேயர் டத்தோ மைமுனா மொஹமது ஷெரீப்,  பிரிட்டன் தூதரகத்தின் பிரதிநிதிகள் ஆகியோர்  உடனிருந்தனர்.

மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள நிலவரங்களை கேட்டு அறிந்தார் இளவரசர் சார்ல்ஸ்,  டச்சஸ் ஆஃப் கார்ன்வால் ஆகியோர் இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முன் 2 நாள் பயணமாக பினாங்கிற்கு வந்துள்ளதாகவும் . மலேசியாவிற்கும்  பிரிட்டனுக்கும் இடையே 60 ஆண்டுகால இருதரப்பு உறவுகளை நினைவுகூறும் வகையில் மலேசியாவுக்கு வருகை புரிந்துள்ளதாகவும் அவர் இச்சந்திப்பின்போது விவரித்தார் .

No comments:

Post a Comment