Friday 24 November 2017

மலேசியாவில் கலைஞானி கங்கை அமரனின் இசை நிகழ்ச்சி உள்ளுர் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம்!


ஆல்சீஸன் இவண்ட் மேனேஜ்மென்ட் மற்றும் பிரைதேக்ஸ் எண்டர்பிரைஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் அஸ்ராஃப் மற்றும் குணசீலன் ஏற்பாட்டில் தென்இந்தியா சினிமாவின் பிரபல இசையமைப்பாளரும் பாடகருமான கங்கை அமரனின் என் இனிய பொன் நிலாவே' எனும் இசை நிகழ்ச்சி நம் நாட்டில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மைசூரி குழுமம் இந்நிகழ்வின் முதன்மை ஆதரவாளர்களாவர். திரைகேன் பையிண்ட் மற்றும் ஜிஹேவா இந்தேரியர்ஸ் இணை ஆதரவாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அண்மையில் உள்ளூர் திரையரங்குகளில் வெற்றிக்கரமாக வெளியீடு கண்ட வேட்டை கருப்பர் ஐயா திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜிகேவின் பிளாக் ஹாந்தேர்ஸ் நிறுவனமும் உள்ளுர் இசையமைப்பாளர் கேஷ் வில்லன்ஸ் இந்நிகழ்விற்கு முழு ஆதரவை வழங்குகின்றனர் என்பதனை நிகழ்வின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் அஸ்ராஃப் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


இந்நிகழ்வில், இசைஞானி இளையராஜா - கலைஞானி கங்கை அமரன் இசைப் பயணங்கள் எனும் கருப் பொருளோடு இந்த நிகழ்வு முதன் முறையாக மலேசியாவில்  நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7.30 மணிக்கு ஷா ஆலாம், மிட்லண்ட்ஸ் மாநாட்டு மண்டபத்தில் மிக விமரிசையாக நடைபெறவுள்ளது. 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துக் கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.


இதில், கலைஞானி கங்கை அமரன் அவர் தம் ஜென்டில்மென் அர்கெஸ்ட்ரா இசை குழுவினர்களும் தமிழகத்தைச் சேர்ந்த பல பாடகர்களும் சினிமா பின்னனி பாடகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதற்கிடையில், உள்ளூர் பாடகர்களும் கலந்துச் சிறப்பிக்கவுள்ளனர்.

இதனிடையே, உள்ளுர் படைப்பாளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி சிறப்பிக்கப்படவுள்ளனர் என நிகழ்ச்சி ஏற்ப்பாட்டாளர்களில் ஒருவரும் பிரைடெக்ஸ் நிருவனத்தின் உரிமையாளருமான குணசீலன் தெரிவித்தார்.


இந்நிகழ்வின் சிறப்பு அம்சமாக கிள்ளான், புக்கிட் திங்கியிலுள்ள யாயாசன் செரிபு ஹாராப்பான் கருணை இல்லத்திற்கு இதன் வழி கிடைக்கப்பெறும் நிதியின்  ஒரு பங்காக 25% நிதியை வழங்கவுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


இதன் செய்தியாளர் சந்திப்பு தலைநகரிலுள்ள சோமா அரங்கில் சிறப்பாக நடைப்பெற்றது. இதில் திரைகன் பையிண்ட் நிர்வாகி கணேசன், டாக்டர் புருசோத்தமணன், தூவான் காசிம், இளங்கோவன் மற்றும் சிறப்பு பிரமுகர்களும் செய்தியாளர்களும் கலந்துச் சிறப்பித்தனர். இந்நிகழ்வை மக்கள் ஒசை நிருபரும் உள்ளூர் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஜெயசீலன் சிறப்பாக வழிநடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வு குறித்து மேல் விவரங்களுக்கு, 016-6191786 அல்லது 0143271310 என்ற எண்களுடன் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment