Thursday 30 November 2017

ஆபாசப் படம் விநியோகம்; ஆடவர் விடுவிப்பு

புத்ராஜெயா-
ஏழாண்டுகளுக்கு முன்பு இளம் பெண் ஒருவருக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியிருந்த ஆசிரிய ர் ஒருவரை மேல் முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்தது.

டத்தோ முகமட் ஸவாவி சாலே, டத்தோ அப்துல் ரஹ்மான் செப்லி, டத்தோ கமாட்டின் ஹஷிம் ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு 38 வயதுடைய அவ்வாடவர் மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது.

மாஜிஸ்திரேட் நீதிமன்றமும் உயர் நீதிமன்றமும் சி.சண்முகத்தை விடுதலை செய்த வேளையில் அவ்விரு நீதிமன்றங்களின் தீர்ப்பில் தலையிடுவதற்கு மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு எவ்வித காரணங்களும் இல்லை என இக்குழுவுக்கு தலைமையேற்ற நீதிபதி முகமட் ஸவாவி தெரிவித்தார்.

கடந்த 2010ஆம் ஆண்டில் ஏப்ரல் 21- 27 தேதிகளில் சிலாங்கூர் ரவாங், தாமான் காரிங் உத்தாமாவைச் சேர்ந்த 16 வயது பெண்ணுக்கு பல்வேறு ஆபாசப் படங்களை தைதொலைபேசியின் வழி அனுப்பியதாக சண்முகா மீது குற்றஞ்சாட்டப்பட்டது. குற்றவியல் பிரிவு 293இன் கீழ் விசாரிக்கப்பட்ட இக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறைத் தண்டனையும் அபராதமும் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கடந்த 2015 ஜனவரி 26ஆம் தேதி செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் சண்முகாவை விடுதலை செய்த வேளையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி ஷா ஆலாம் உயர்நீதிமன்றமும் அவரை விடுதலை செய்தது.

No comments:

Post a Comment