Saturday 25 November 2017

'இரு தலைவர்களின் தோல்வி; மக்களுக்கே பெரு நஷ்டம்' - சுங்கை சிப்புட் இளங்கோ- பகுதி - 1


நேர்காணல்: ரா.தங்கமணி

மலேசியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு சரித்திரப் புகழ் வாய்ந்த தொகுதியாக திகழ்வது சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியாகும். இந்த தொகுதியில் போட்டியிட்ட ஓர் அமைச்சரையும் ஒரு துணை அமைச்சரையும் தோற்கடித்ததன் விளைவுதான் இன்று வறுமையில் உழன்றுள்ள மக்களின் பிரச்சினைக்கு உதவிக்கரம் நீட்ட முடியாத சூழல் நிலவுகிறது என சுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவர் இளங்கோவன் முத்து தெரிவித்தார்.

'பாரதம்' மின்னியல் ஊடகம் அவருடன் நடத்திய சிறு நேர்காணலின் தொகுப்பு இங்கே:

கேசுங்கை சிப்புட் தொகுதி மஇகா தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து உங்களின் சேவை?

: இத்தொகுதியின் மஇகா தலைவராக பொறுப்பேற்றதிலிருந்து மக்களுக்கான பல்வேறு சமூக நடவடிக்களை மேற்கொண்டு வருகிறோம். இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் மிகப் பெரிய பிரச்சினையே அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதுதான்.

கடந்த 9 ஆண்டுகளாக இத்தொகுதி எதிர்க்கட்சி வசம் உள்ளது. மானியம் ஏதும்  இல்லாத காரணத்தினால் இங்குள்ள மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது ஓர் இக்கட்டான சூழலாக உள்ளது.

கே: கடந்த இரு பொதுத் தேர்தல்களில் தேமு வேட்பாளர்கள் தோல்வி அடைந்தது பற்றி?

: பொதுத் தேர்தல்களில் வெற்றி, தோல்வி என்பது மக்களின் முடிவில் உள்ளது. தங்களுக்கான மக்கள் பிரதிநிதி யார் என்பதை தெரிவு செய்யும் உரிமை அவர்களிடம் உண்டு. ஆனால் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேமு வேட்பாளர் தோல்வி அடைந்தது ஒரு பின்னடைவு ஆகும்.

ஏனெனில் இங்கு தோற்றுபோனது சாதாரண வேட்பாளர்கள் அல்லர். ஓர் முழு அமைச்சர் பதவியை வகித்துக் கொண்டிருந்தவரும் ஒரு துணை அமைச்சர் பதவியை வகித்துக் கொண்டிருந்தவருமாவர். அவர்களின் தோல்வி 'மக்களுக்கே பெரு நஷ்டம்'.

கே: தற்போது மக்கள் நாடுவது எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரையா? மஇகாவையா?

: கடந்த 9 ஆண்டுகளாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்கிறார். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மானியம் வழங்கப்படுவதில்லை என்பது உலக நடைமுறையாகும். எதிர்க்கட்சிக்கு மானியம் வழங்க முடியாததால் சேவையை எப்படி வழங்க முடியும்?

மஇகாவினால் மட்டுமே சமூக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்வி, வறுமை ஆகிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதோடு பொது இயக்கங்களுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு அதன் மூலம் சேவைகள் தொடரப்படுகின்றன.

சுங்கை சிப்புட்டில் 9 ஆண்டுகளாக எதிர்க்கட்சி ஆட்சி புரிந்தாலும் மக்கள் நாடி வருவது மஇகாவை தான். அதை யாரும் மறுக்க முடியாது.

கே: எதிர்க்கட்சியிடமிருந்து இத்தொகுதியை மீட்டெடுக்க எத்தகைய  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன?

: எதிர்க்கட்சி வசமுள்ள  இத்தொகுதியை தேமு மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், பேராக்  மஇகா சார்பில் தங்கராஜு ஆகியோரை கொண்டு தேர்தல் நடவடிக்கைக் குழு அமைக்கப்பட்டு பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இளைஞர், மகளிர் பிரிவினரும் களமிறங்கி மக்களை சந்திக்கின்றனர்.

ஆலயம், பொது இயக்கங்களுக்கு அக்டோபரில் 120,000 வெள்ளிக்கான மானியங்கள் வழங்கப்பட்டன. இங்குள்ள தமிழ்ப்பள்ளிகளில் மேம்பாட்டு, சீரமைப்புக்காக 600,000 வெள்ளி வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்ட டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி தோல்வி அடைந்த போதிலும் 25 லட்சம் வெள்ளி மதிப்புடைய அடிப்படை தேவைகளை (பொது மண்டபம், திடல், சாலை சீரமைப்பு) பூர்த்தி செய்யும் வேலைகளை முன்னெடுக்கப்பட்டு தற்போது 90% பணிகள் பூர்த்தியாகிவிட்டன.

தேசிய முன்னணி ஒன்றுதான் நாடாளுமன்ற, சட்டமன்ற  செயலவை அமைத்துள்ளது. தொகுதி மக்களுடன் சந்திப்பு நடத்தி பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு கண்டு வருகிறோம்.

-நாளை தொடரும்...-

No comments:

Post a Comment