Tuesday 24 July 2018

இந்திய விவகாரப் பிரிவு பொறுப்பாளராக சிவசுப்பிரமணியம் நியமனம்


ரா.தங்கமணி

ஈப்போ-
பேரா மாநில முஸ்லீம் அல்லாதோர், இந்திய விவகாரப் பிரிவுக்கு பொறுப்பாளராக புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என முஸ்லீம் அல்லாதோர் விவகாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங் தெரிவித்தார்.

தன்னுடைய அரசியல் செயலாளராக சிவசுப்பிரமணியம் பணி தொடர்வார் என குறிப்பிட்ட அவர், கூடுதலாக முஸ்லீம் அல்லாதோர் விவகாரங்களையும் இந்தியர்களின் பிரச்சினைகளையும் கவனிப்பார் என்றார்

இன்று முதல் அவரின் பொறுப்பு நடைமுறைக்கு வருகிறது என பவுல் குறிப்பிட்டார்.

இப்பதவி நியமனம் குறித்து பேசிய சிவசுப்பிரமணியம், இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீவிர கவனம் செலுத்தப்படும் அதே வேளையில் முஸ்லீம் அல்லாதோரின் (பிற சமயத்தினர்) விவகாரங்களிலும் கவனம் செலுத்தப்படும்.

இந்தியர்கள் எதிர்நோக்கும் ஆலயம், தமிழ்ப்பள்ளி, நிலம் உட்பட பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என அவர் சொன்னார்.

No comments:

Post a Comment