Wednesday 4 July 2018

செந்தமிழ் புரொடக்ஷன் ஏற்பாட்டில ஜூனியர் சிங்கர்! சிறுமி அனுக்சியா முதல் பரிசை தட்டி சென்றார்!


புனிதாசுகுமாரன்:

ஈப்போ: செந்தமிழ் புரொடக்ஷன் ஏற்பாட்டில்  20து மாநில ரீதியாக நடைபெற்ற ஜூனியர் சிங்கர் பாடல் திறன் போட்டியில் சிறுமி அனுக்சியா முத்துராமன் முதல்  பரிசாக வெ,1,500ஐ தட்டிச்சென்றார் இரண்டாவது பரிசை சுங்கைசிப்புட்டை சேர்ந்த யோகேஸ்வரிமாறன்னும் மூன்றாவது பரிசினை ஆஸ்வரியா லச்சுமி தேவாவும் நான்காவது பரிசை வி.டிவஸ்னவி, ஐந்தாவது பரிசினை கிடன்பால் ஆகியோரும் அழகிய தமிழில் பாடல்களை பாடி பரிசுகளை தட்டிச்சென்றனர்.
 
கடந்த ஆறு மாதகளாக செந்தமிழ் புரொட்க்ஷன் ஏற்பாட்டில்  நடைபெற்ற  ஜூனியர் சிங்கர் போட்டியில் 15 மாவட்டத்தை சேர்ந்த 130 மாணவர்கள் ஆர்வத்துடன்  கலந்துக்கொண்டனர் அதில் இறுதி சற்றுக்கு 20 மாணவர்கள் தேர்வு பெற்றனர்.
புந்தொங்கில் உள்ள மாரியமன் ஆலய மண்டபத்தில் ஜூனியர் சிங்கர் நடைப்பெற்றது இந்நிகழ்வில் பேராக் மாநில ஆச்சிகுழு உறுப்பினர் அ.சிவநேசன் கலந்துகொண்டு மாணவர்கள் அனைவரின் தமிழ் ஆர்வத்தை வெகுவாக பாராட்டி பேசினார்
  சிருவயதிலயெ மாணவர்கள் இதுபோன்ற பாடல் திறனை கொண்டிருப்பது சாதாரண விசியம்மல்ல கண்டிப்பாக தமிழ்மாணவர்களால் மட்டுமே இவ்வளவு ஆழகாக தமிழ் உச்சரிப்பொடு பாடமுடியும் என்றதொடு மாணவர்களை வெகுவாக பாராட்டி செந்தமிழ் புரொடக்ஷன் மேற்கொண்டுள்ள ஜூனியர் சிங்கர் போட்டியை பாராட்டி பேராக் மாநில அரசாங்கம் மூலம் வெ.5 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்றார்.
  மேலும் இந்நிகழ்வில் முன்னதாக தலைமையுரை ஆற்றிய செந்தமிழ் புரொடக்ஷன் தலைவர் எம்.எ அலி நிகழ்த்திய உரையில் அவர் முன்வைத்த கோரிக்கைகலை மனித வள அமைச்சர் எம்.குல சேகரன் பார்வைக்கு கொண்டுப்பொவதாக தெரிவித்தார்.
  வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு ஆச்சி குழு உறுப்பினர் பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்வில்
மக பெரு  டாட்டர் ஜெயபாலன், செபஸ்தியார் கலைகூட தலைவர் செபஸ்தியர், பேராக் மாநில இந்துசங்கத்தின் மகளிர் தலைவி பத்மாதேவி, கடலை வியாபாரி குணசேகரன், புவனேஸ்வரன்,செலவகனேசன் மற்றும் பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டு நிகழ்வை மெருகூட்டினர்.

No comments:

Post a Comment