Tuesday 31 July 2018

பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்திருந்தாலும் மரணச் சம்பவங்கள் ஏதுமில்லை- சிவநேசன்


ரா.தங்கமணி/ புனிதா சுகுமாறன்

ஈப்போ-
சிறார்களை பாதிக்கும் வாய், கை, கால் புண் நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை பேரா மாநிலத்தில் அதிகரித்துள்ள நிலையில் அதனால் எவ்வித மரணச் சம்பவங்களும்  ஏற்படவில்லை என மாநில சுகாதாரப் பிரிவு ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் தெரிவித்தார்.

7 வயதுக்கு கீழ்பட்ட சிறுவர்களை பாதிக்கக்கூடிய இந்நோயினால் இம்மாநிலத்தில் அபாயகரமான சூழல் நிலவவில்லை எனவும் சிலாங்கூர், பினாங்கு மாநிலங்களைப் போன்று பள்ளிகளை மூடும் சூழ்நிலை ஏற்படவில்லை எனவும் அவர் விவரித்தார்.

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்க மாநிலத்திலுள்ள 15 மருத்துவமனைகளும் அரசாங்க கிளினிக்குகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நோயினால் பாதிக்கப்படும் சிறார்களை அருகேயுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பெற்றோர்களுக்கு சிவநேசன் அறிவுறுத்தினார்.

இந்நோயை எதிர்கொள்ள அனைத்து மருத்துவமனைகளும் தயார் நிலையில் உள்ள சூழலில் அதற்கான போதிய மருந்தும் மருத்துவமனை கட்டிகளும் தயார்படுத்தப்பட்டுள்ளன.

இந்நோயிலிருந்து தற்காத்துக் கொள்ள சிறார்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்டுத்த வேண்டும் எனவும் கை, கால்களில் தூய்மை பேணுவது உட்பட பல்வேறு ஆரோக்கிய நடவடிக்கைகளையும் கற்று தர வேண்டும் என இன்று CREW SKILLS Culinery school of Asia வளாகத்தை பார்வையிட வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் இவ்வாறு சொன்னார்.

No comments:

Post a Comment