Tuesday 31 July 2018

15 ஊராட்சி மன்றங்களில் 1,000 தெரு விளக்குகள்- ஆட்சிக்குழு உறுப்பினர் அறிவிப்பு


புனிதா சுகுமாறன்

ஈப்போ-

பேராக் மாநிலத்தில் உள்ள 15 ஊராட்சி மன்றத்தைச் சேர்ந்த இருள் சூழ்ந்துள்ள பகுதிகளில் ஆயிரம் தெரு விளக்குகள் பொருத்தப்படும் என ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சோ கியோங்  தெரிவித்தார்.

இன்று ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவி பிரமணம் நிகழ்வுக்கு பிறகு நிருபர்களிடம் பேசுகையில் அவர் மேற்குறிப்பிட்ட தகவலை நிருபர்களிடம் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில் இ.பிரிப்பெய்ட் வாகன பார்கிங் திட்டத்தை அமுல்படுத்தவிருப்பதாகவும்  வாகனமோட்டிகளின் வசதிக்கேற்ப செல்போனிலேயே வாகனமோட்டிகள் தங்களின் பார்க்கிங் பணத்தை செலுத்திக்கொள்ள ஏதுவாக இ- பிர்பெய்ட் திட்டத்தை அமல்படுத்தவிருப்பதாகவும்  அவர் சொன்னார்.

இதனால் பார்க்கின் கூப்பனை தேடி அலைய வேண்டிய நிலை ஏற்படாது என கூறிய அவர், மின்னியல் முறையிலான இத்திட்டல்  வாகனமோட்டிகளுக்கு இலகுவானதாக இருக்கும் என சொன்னார்.


No comments:

Post a Comment