Tuesday 3 July 2018

ஜூனியர் சிங்கர் போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்றார் அனுஷியா


புனிதாசுகுமாறன்

ஈப்போ:
செந்தமிழ் புரொடக்ஷன் ஏற்பாட்டில்  நடைபெற்ற ஜூனியர் சிங்கர் பாடல் திறன் போட்டியின் இறுதிச் சுற்றில்  சிறுமி அனுஷியா முத்துராமன் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

இரண்டாவது பரிசை சுங்கை சிப்புட்டை சேர்ந்த யோகேஸ்வரி மாறனும் மூன்றாவது பரிசை ஐஸ்வரியா லட்சுமி தேவாவும் நான்காவது பரிசை வி.டிவாஸ்னவி, ஐந்தாவது பரிசை கிடன்பால் ஆகியோரும் வென்றனர்.

கடந்த ஆறு மாதகளாக செந்தமிழ் புரொட்க்ஷன் ஏற்பாட்டில்  நடைபெற்ற  ஜூனியர் சிங்கர் போட்டியில் 15 மாவட்டத்தை சேர்ந்த 130 சிறுவர்கள் ஆர்வத்துடன்  கலந்துக்கொண்டனர் அதில் இறுதி சுற்றுக்கு 20 சிறுவர்கள் மட்டுமே தேர்வு பெற்றனர்.

புந்தோங்கில் உள்ள மாரியம்மன் ஆலய மண்டபத்தில் நடைபெற்ற ஜூனியர் சிங்கர் இறுதிச் சுற்றில் கலந்து  கொண்ட பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கலந்துகொண்டு மாணவர்கள் அனைவரின் தமிழ் ஆர்வத்தை வெகுவாக பாராட்டி பேசினார்.

 சிருவயதிலயே சிறார்கள் இதுபோன்ற பாடல் திறனை கொண்டிருப்பது சாதாரண விஷயமல்ல. கண்டிப்பாக மாணவர்களால் மட்டுமே இவ்வளவு அழகாக தமிழ் உச்சரிப்போடு பாடமுடியும் என்றதோடு சிறார்களை ஊக்குவிக்கும் வகையில் இதுபோன்ற போட்டிகளை நடத்தும்  செந்தமிழ் புரொடக்ஷன் மேற்கொண்டு வரும் நடவடிக்கை பாராட்டி 5 ஆயிரம் வெள்ளி மானியம்  வழங்கப்படும் என்றார்.

மேலும் இந்நிகழ்வில் முன்னதாக தலைமையுரை ஆற்றிய செந்தமிழ் புரொடக்ஷன் தலைவர் எம்.எ அலி  முன்வைத்த கோரிக்கைகளை மனித வள அமைச்சர் எம்.குல சேகரன் பார்வைக்கு கொண்டுச் செல்வதாகவும் அவர் தெரிவித்தார்.

வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு சுங்காய் சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் மகப்பேறு மருத்துவர் வ.ஜெயபாலன், செபஸ்தியார் கலைக்கூட தலைவர் செபஸ்தியர், பேராக் மாநில இந்து சங்கத்தின் மகளிர் தலைவி பத்மாதேவி, கடலை வியாபாரி குணசேகரன், புவனேஸ்வரன்,செல்வ கனேசன் உட்பட  பல பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment