Thursday 26 July 2018

ஸெஃபாயர் கால்பந்து அணிக்கு சிவசுப்பிரமணியம் ஆதரவு


ரா.தங்கமணி

ஈப்போ-
கால்பந்து துறையில் இந்திய இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் ஸெஃபாயர் கால்பந்து அணிக்கு தனது ஆதரவை வழங்கினார் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம்.

சம்பந்தன் கிண்ணம் உட்பட பல்வேறு கால்பந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள இவ்வணிக்கு 3,850 வெள்ளி மானியம் வழங்கியுள்ளதாக சிவசுப்பிரமணியம் குறிப்பிட்டார்.

புந்தோங் வட்டாரத்திலுள்ள இந்திய இளைஞர்கள் சமூக சீர்கேடுகளில் ஈடுபடாமல் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபதற்கு ஏதுவாக இந்த உதவி வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.

யோகநாதனை பயிற்சியாளராகவும் சரவணக்குமாரை அணியின் தலைவராகவும் கொண்ட இவ்வணி சிவசுப்பிரமணியத்தை சந்தித்து தங்களது நன்றியை புலபடுத்திக் கொண்டனர்.

No comments:

Post a Comment