Thursday 26 July 2018

'சொஸ்மா' சட்டத்தினால் உயிரும் சொத்துகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன- டத்தோஶ்ரீ நஜிப்


கோலாலம்பூர்-
பயங்கரவாத, குண்டர் கும்பல் நடவடிக்கையை துடைத்தொழிப்பதற்காக உருவாக்கப்பட்ட 'சொஸ்மா' சட்டத்தினால் மக்களின் உயிரும், சொத்துகளும் பாதுகாக்கப்பட்டுள்ளன என்று முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் குறிப்பிட்டார்.

2012ஆம் ஆண்டு அமலாக்கம் செய்யப்பட்ட சொஸ்மா சட்டத்தை அகற்றுவதனால் பயங்கரவாத நடவடிக்கைகள் தலைவிரித்தாடுவதோடு உலக நாடுகளின் நம்பிக்கையும் நமது நாடு இழக்கக்கூடிய சூழல் நிலவும்.

'சொஸ்மா' சட்டத்தின் வாயிலாக பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முன்னரே அதில் சம்பந்தப்பட்டுள்ளோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடியும்.

நாட்டின் பாதுகாப்புக்கு துணையாக உள்ள சட்டத்தை
அகற்றுவதனால் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு யார் பொறுப்பேற்பது என டத்தோஶ்ரீ நஜிப் கேள்வி எழுப்பினார்.

மிகவும் சர்ச்சைக்குரியதாக உள்ள சொஸ்மா சட்டத்தை அரசாங்கம் அகற்றும் என பிரதமர் துன் மகாதீர் முகம்மது இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்திற்கு (இசா) பதிலாக சொஸ்மா சட்டம் அமலாக்கம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment