Sunday 1 July 2018

தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் பள்ளிகளுக்கு கூடுதல் உதவிகள்- சிவநேசன்


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
மாணவர்களின் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்பட்டால் அப்பள்ளிகளுக்கு அரசாங்கத்தின் உதவி நிச்சயம் வந்தடையும் என பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன்  கூறினார்.

மாணவர்களின் கல்வித் தரம் மேம்படுத்தப்படுவது அவசியமாகும். அவ்வகையில் பள்ளிகளில் அதற்கான அடிப்படை சூழல் உருவாக்கப்பட வேண்டும்.

தேர்வுகளில் சில மாணவர்கள் மட்டும்  'ஏ' பெறுவதை  இலக்காகக் கொள்ளாமல் அனைத்து மாணவர்களின் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகரிக்கப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.

அனைத்து மாணவர்களின் கல்வி தேர்ச்சி விகிதம் உயர்த்தப்படும் நிலையில் அப்பள்ளிகளுக்கு மாநில அரசின் உதவிகள் கூடுதலாக வழங்கப்படும்.
இதனால் பிற பள்ளிகளுக்கு மானியம் வழங்கப்படாது என பொருள்படாது. பிற பள்ளிகளுக்கும் மானியம் வழங்கப்படும். ஆனால் மாணவர்களின் கல்வி தேர்ச்சியை உயர்த்தும் பள்ளிகளுக்கு இன்னும் கூடுதலான உதவிகள் சென்றடையும் என இங்கு குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற 'பண்பு தளிர்' நிகழ்வில் சிவநேசனின் பிரதிநிதியாக கலந்து கொண்ட உ.முத்துசாமி தொடக்கவுரை ஆற்றுகையில் அ இவ்வாறு சொன்னார்.

இந்நிகழ்வில் வண்னம் தீட்டும் போட்டி,  நன்னெறி பண்புகள் விளையாட்டு, மாணவர் படைப்பு ஆகியவற்றில் பங்கேற்று மாணவர்கள் தங்களது திறனை வெளிபடுத்தினர்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி கோகிலவாணி, பேரா மாநில தமிழ்ப்பள்ளிகள் தீர்வு குழுத் தலைவர் செல்வம் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment