Friday 27 April 2018

'கை' சின்னத்தில் டாக்டர் ஜெயகுமார் போட்டி


ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலில் சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பானை எதிர்த்தி பிஎஸ்எம் கட்சி சொந்த சின்னத்தில் களமிறங்கவுள்ளது.

கடந்த 2008, 2013 ஆகிய இரு பொதுத் தேர்தல்களில் கெ அடிலான் சின்னத்தின் கீழ் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிஎஸ்எம் கட்சியைச் சேர்ந்த டாக்டர் ஜெயகுமார், இம்முறை கட்சியின் சொந்த சின்னமான 'கை' சின்னத்தில் போட்டியிடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடன் பிஎஸ்எம் கட்சி இணைத்துக் கொள்ளப்படாததால் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினராக இருமுறை பதவி வகித்த டாக்டர் ஜெயகுமார் இம்முறை பிகேஆர் சின்னத்தின் போட்டியிடுவதற்கு பக்காத்தான் கூட்டணி 'பச்சை கொடி' காட்டவில்லை என அறியப்படுகிறது.

இத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக எஸ்.கேசவன் ஆகியோர் போட்டியிடும் சூழலில் பிஎஸ்எம் கட்சி சார்பில் டாக்டர் ஜெயகுமாரும் களம் காணவுள்ளதால் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

டாக்டர் ஜெயகுமார் பக்காத்தான் கூட்டணியில் இணையாமல் தனித்து போட்டியிட்டால் அது தேசிய முன்னணிக்கு 'வெற்றியாக' அமையலாம் என அரசியல் பார்வையாளர்களும் ஆதரவாளர்களும் கருதுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment