Wednesday 25 April 2018

தமிழ்ப்பள்ளிக்கூடப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பேன் - தங்கராஜ் - (வீடியோ இணைப்பு)


புனிதா சுகுமாறன்

ஈப்போ-
'ஒரு தமிழ்ப்பள்ளிக்கூடம் இல்லையே' என்ற ஜெலாப்பாங் வட்டார மக்களின் ஆதங்கம்  நான் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் நிவர்த்தி செய்யப்படும் என ஜெலாப்பாங் சட்டமன்றத் தொகுதி தேமு வேட்பாளர் தங்கராஜ் கூறினார்.

அங்கு தமிழ்ப்பள்ளி இல்லையே என்கிற ஆதங்கம் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற சூழலில் அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதே எனது முதல் நடவடிக்கையாக இருக்கும்.

மேலும் சந்தை பகுதி, சீனர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும் என பேரா தேசிய முன்னணி வேட்பாளர் அறிமுக நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தங்கராஜ்  இவ்வாறு கூறினார்.

வீடியோ இணைப்பு:




No comments:

Post a Comment