Sunday 29 April 2018

4 முனைப் போட்டியில் சுங்கை சிப்புட்



ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
மிகவும் பரபரப்பை ஏற்படுத்திய சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி 4 முனை போட்டியை எதிர்கொண்டுள்ளது.

இன்று கோலகங்சார் நகர மண்டபத்தில் நடைபெற்ற வேட்பு மனுத்தாக்கலின்போது தேசிய முன்னணியின் வேட்பாளராக டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி, பிகேஆர் கட்சியின் சார்பில் கேசவன் சுப்பிரமணியம், பிஎஸ்எம் கட்சியின் சார்பில் டாக்டர் மைக்கல் ஜெயகுமார், பாஸ் கட்சியின் சார்பில் டாக்டர் இஷாக் ஆகியோர் இன்று தங்களது வேட்புமனுவை சமர்பித்தனர்.

லிந்தாங் தொகுதி

லிந்தாங் சட்டமன்றத் தொகுதி மும்முனைப் போட்டி எதிர்கொண்டுள்ளது. இங்கு தேசிய முன்னணி, பிகேஆர், பாஸ் ஆகியவை போட்டியிடுகின்றன. தேசிய முன்னணி சார்பில் டத்தோ சூல்கிப்ளி ஹருண், பிகேஆர் கட்சியின் சார்பில் மஹ்டி ஹசான், பாஸ் கட்சியின் சார்பில் இஸ்ரான் பாஹ்மி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

ஜாலோங் தொகுதி

ஜாலோங் தொகுதியில் இம்முறை நேரடி மோதலை சந்தித்துள்ளது. இங்கு தேசிய முன்னணி வேட்பாளராக டத்தோ டான் லியான் ஹோ, பிகேஆர் வேட்பாளராக லோ சீ யீ ஆகியோர் களமிறங்குகின்றனர்.

சுயேட்சைகள் இல்லாத போட்டி

கடந்த பொதுத் தேர்தலின்போது நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளுக்கு சுயேட்சை வேட்பாளர்கள் களமிறங்கிய சூழலில் இத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக யாரும் களமிறங்கவில்லை. கடுமையான போட்டி நிறைந்த தேர்தலாக இது இருப்பதால் சுயேட்சை வேட்பாளராக களமிறங்க பலர் தயக்கம் காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment