Saturday 28 April 2018

மகாத்மா காந்தி கலாசாலைக்கு கணினி, மேசை - நாற்காலிகள் அன்பளிப்பு



ரா.தங்கமணி

சுங்கை சிப்புட்-
இங்குள்ள மகாத்மா காந்தி கலாசாலைக்கு கணினிகள், மேசை - நாற்காலிகளை மஇகா தேசிய துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எஸ்.கே.தேவமணி வழங்கினார்.

சுங்கை சிப்புட் மஇகா இளைஞர் பரிவு துணைத் தலைவர் எஸ்.லிங்கேஸ்வரன் ஏற்பாட்டில் பிரதமர் துறையின் கீழ் வழங்கப்பட்ட இந்த கணினி, மேசை- நாற்காலிகள் மகாத்மா காந்தி கலாசாலைக்கு வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் உரையாற்றிய டத்தோஶ்ரீ தேவமணி, ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளுக்கும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும் தொடர்ந்து ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மாணவர்களின் கல்வி நலனுக்காக மானியங்கள் மட்டுமின்றி தளவாடப் பொருட்களையும் மாணவர்களுக்கான உபகரணப் பொருட்களையும் வழங்கி வருகிறது.

மாணவர்கள் தாம் முக்கியம் என்ற நிலையில் ஆளும் தேசிய முன்னணி அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளை ஒருபோதும் கைவிடாது என சுங்கை சிப்புட் தேமு வேட்பாளருமான டத்தோஶ்ரீ தேவமணி குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் பள்ளி தலைமையாசிரியர் திருமதி சாந்தகுமாரி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் கோபி, சுங்கை சிப்புட் மஇகா செயலாளர் கி.மணிமாறன், கிளைத் தலைவர்கள் அப்துல் ஜபார், அசோக், தாஸ் உட்பட ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment